Followers

Wednesday, February 5, 2020

அழகப்பரின் பம்பாய் ஓட்டல்கள்

வள்ளல் அழகப்ப செட்டியாரின் பம்பாய் ஓட்டல்கள்.


அழகப்ப
செட்டியார்
ரு முறை வணிக பயணமாக பம்பாய் சென்றிருந்த வள்ளல் அழகப்ப செட்டியார், பம்பாய் 'சர்ச் கேட்'டில் இருந்த "ரிட்ஸ்" ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்காக சென்றிருந்த பொழுது அவர் மற்றொரு புதிய வணிகத்தை ஆரம்பிக்க நேர்ந்தது.



ஓட்டலுக்கு தன் உதவியாளர்களுடன் சென்று அறைகள் வேண்டுமென்று கேட்டார். வரவேற்பாளர் அழகப்பர் முகத்திலுள்ள தழும்புகளைப் பார்த்துவிட்டு அறைகள் நிரம்பிவிட்டது உங்களுக்கு இல்லை என்றார். அழகப்ப செட்டியாரும் அவர் உதவியாளர்களும் முகப்பு வரவேற்பு அறையில் அமர்ந்து மாற்று வழி பற்றி பேசிக் கொண்டிருந்தனர், பின்னர் ஒரு தளத்தில் உள்ள அத்தனை அறைகளையும் தான் எடுத்து கொள்வதாக சொன்னார். வரவேற்பாளர் மீண்டும் அறைகள் இல்லை என்பதையே கூறினார்.

ஓட்டலின் மேலாளர் ஒரு ஐரோப்பியர், அவர் அழகப்ப செட்டியாரை அவமதிக்கும் விதமாக "இங்கு ஒரு அறை கிடைப்பதற்கு நீ இந்த ஓட்டலையே விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்" என்றார்.

இதை சவாலாக ஏற்றுக்கொண்டு அன்றே தன் நண்பர்கள் மூலமாக ரிட்ஸ் ஓட்டல் உரிமையாளரைக் கண்டுபிடித்தது ஓட்டலை விலைக்கு வாங்கினார்.

அடுத்த நாள் ரிட்ஸ் ஓட்டல் உரிமையாளராக உள்ளே சென்ற அழகப்ப செட்டியார் "நான் இப்பொழுது இந்த ஓட்டலின் உரிமையாளர் எனக்கு ஒரு அறை கிடைக்குமா?"என்றார். செட்டியாரின் கேள்வியைக் கேட்டு அதிர்ந்து போன வரவேற்பாளரையும் மேலாளரையும் மன்னித்து, அறிவுரை கூறி தங்கள் பணியை தொடர சொன்னார்.
இப்படியாக உயர்தர வசதிகளுடனும் நற்பெயருடனும்  ஐரோப்பிய பாணியில் செயல்பட்டு வந்தது ரிட்ஸ் ஓட்டல்.

அழகப்ப செட்டியார் மனதில்
சாமானிய நடுத்தர மக்கள் தங்கும் வகையில் பம்பாயில் ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக
'சர்ச் கேட்டி'லிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள "மரைன்லைன்ஸ்"அருகில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தை வாங்கி "ஓட்டல் வெஸ்ட் என்ட்" என்ற புதிய ஓட்டலை உருவாக்கினார்.



ஒரு ஓட்டலில் அறை மறுக்கப்பட்டதால் அந்த ஓட்டல் உட்பட இரண்டு ஓட்டல்களின் அதிபரானார் அழகப்ப செட்டியார் என்பது ஆச்சரியமான தகவல்.

அழகப்பா பல்கலைக்கழகம்

பின்னர் 1953ல் அவருடைய கல்வி நிறுவனங்களுக்கான கட்டிடங்களுக்கு நிதி தேவைப்பட்டதால் இரண்டு ஓட்டல்களையும் விற்றுவிட்டார்.

Kailash PL

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...