Followers

Monday, June 29, 2020

காளையார் கோயில் அரிய புகைப்படம்.

காளையார் கோயில் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது. 
நாட்டுக்கோட்டை நகரத்தார் திருப்பணியின் போது 1800கள் இறுதியில் எடுக்கப்பட்டது.


பாண்டிய நாட்டிலுள்ள தேவாரப் பதிகம் பெற்ற தலங்கள் பதினான்கினுள்  "திருக்கானப்பேர்" எனும் "காளையார்கோயில்" ஒன்று.

அதி அற்புதமான இத்தலத்தில் மூன்று இறைவனும் மூன்று  இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லி

சோமேசர் - சவுந்தரவல்லி

சுந்தரேசுவரர் - மீனாட்சி

பலநூறு ஆண்டுகட்கு முன் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோயில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பெற்றும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.

பாண்டியனால் கட்டப்பட்ட 5 நிலைகளைக் கொண்ட 90அடி உயர ராஜ கோபுரமும் அதன் அருகே 18ஆம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்ட 9 நிலைகளைக் கொண்ட 155 1/2அடி உயர இராஜகோபுரமும் உள்ளன.

இத்தலத்தில் நாம் காணும் சுந்தரேசுவரர் - மீனாட்சி கோயில், நூறுகால் மண்டபம் நீங்கலாக ஏனைய சோமேசர்-சவுந்தரவல்லி கோவில், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி கோவில் நகரத்தாரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டும், புதிதாக மண்டபங்களும் சுற்று பிரகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
1800கள் மத்தியில் தொடங்கி 1900கள் தொடக்கம் வரை திருப்பணிகள் நடந்துள்ளது.

காளையார் கோவில்- ஆனைமடு


இந்த புகைப்படம் 1900கள் தொடக்கத்தில் குளம் கட்டப்பட்ட புதிதில் எடுக்கப்பட்டது.



காளையார் கோயில் தெப்பக்குளம் - கஜபுஷ்கரணி எனும் ஆனைமடு குளம்.

புராண கதைப்படி, "இந்திரனின் வாகனமான ஐராவத யானை மகரிஷி ஒருவர் கொடுத்த சாபம் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டதாகவும், அப்போது தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாகவும், அந்த யானை உண்டாக்கிய பள்ளமே ஆனைமடு என்று சொல்லப்படுகிறது".

இக்குளம் பலநூறு ஆண்டுகட்கு முன் வெட்டப்பட்டது.

1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் "அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார்" அவர்கள் கல் திருப்பணி செய்து, மேலும் அழகு சேர்க்கும் வகையில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் நீராழி மண்டபத்தை ஒத்து இக்குளத்தின் நடுவில் மிக அற்புதமான நீராழி மண்டபம் ஒன்றை புதிதாக நிறுவியுள்ளார்கள்.

கண்டதேவி ஊருணி



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி ஊருணி. 1900கள் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


இந்த ஊருணி அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தாரால் 1800கள் மத்தியில் கட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் சிறிய கோயிலாக இருந்த கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலை மேற்படி குடும்பத்தார் பெரிய கற்றளி கோயிலாக எழுப்பியுள்ளனர். நாட்டுக்கோட்டை நகரத்தார்களுள் கோயில் திருப்பணி செய்தவர்களில் மிக  முக்கியமானவர்கள் வயிநாகரம் குடும்பத்தார்.


பர்மா கடிதங்கள்

1899இல் பர்மாவிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்.

" பெரி.சு.று. கருப்பன் செட்டிக்கு
றெங்கோன்"

று- இராம
றெங்கோன்- ரங்கூன்(Rangoon)


பாரதி கடிதம்

1919இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கானாடுகாத்தான் வை.சு.சண்முகனாருக்கு எழுதிய கடிதம்.


நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...