Followers

Showing posts with label அழகப்ப செட்டியார். Show all posts
Showing posts with label அழகப்ப செட்டியார். Show all posts

Friday, July 18, 2025

அழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் காமராஜர்

       ழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், கல்லூரி நிறுவனர் வள்ளல் அழகப்ப செட்டியார், முருகப்பா குரூப்ஸ் அ.மு.மு.முருகப்ப செட்டியார், கானாடுகாத்தான் C.V.CT.வெங்கடாசலம் செட்டியார் இருக்கும் புகைப்படம்.



கோட்டையூரில் தாம் கட்டிய வீட்டை(ஸ்ரீநிவாஸ்) 1954-ஆம் ஆண்டு மகளிர் கல்லூரியாக மாற்றினார் வள்ளல் அழகப்பர். ஆகையால் "குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்" என்று போற்றப்படுகிறார்.

-பழ.கைலாஷ் 

Tuesday, April 7, 2020

வள்ளல் அழகப்பர் பிறந்தநாளும் இறந்தநாளும்...

அழகப்ப செட்டியார் 
ள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் சென்னை வேப்பேரியில் உள்ள தனது இல்லமான கிருஷ்ண விலாஸில் 05.04.1957ல் மறைந்தார். 

அடுத்த நாள், 06.04.1957 அவரது 48ஆவது பிறந்தநாளன்று, அவருடைய பூதவுடல் கோட்டையூர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. 



மரியாதை நிமித்தமாக, அழகப்பர் தொடங்கி வைத்த அணைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. காரைக்குடி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு அழகப்பர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.



இறுதி ஊர்வலமானது காரைக்குடி வீதிகளில் சுற்றி அழகப்பாபுரம் சென்றடைந்தது, அழகப்பரின் ஆசைப்படி அவர் முன்பே குறிப்பிட்ட இடத்தில், இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 6 மணியளவில் அவரது அண்ணன் மகன் இராம.நாச்சியப்பன் சிதைக்குத் தீ மூட்டினார்.

இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவேன்றால் வள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் பிறந்த நாளும் எரியூட்டப்பட்ட நாளும் ஒரேநாள். 
••••••••

இத்தகவல் வள்ளல் அழகப்பரின் பேரன் திரு.இராமநாதன் வைரவன் எழுதிய Alagappa:A Beautiful Mind புத்தகத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 6) வள்ளல் இராம.அழகப்ப செட்டியாரின் 111வது பிறந்தநாள்.

பதிவு: Kailash PL
06.04.2020



Wednesday, February 5, 2020

அழகப்பரின் பம்பாய் ஓட்டல்கள்

வள்ளல் அழகப்ப செட்டியாரின் பம்பாய் ஓட்டல்கள்.


அழகப்ப
செட்டியார்
ரு முறை வணிக பயணமாக பம்பாய் சென்றிருந்த வள்ளல் அழகப்ப செட்டியார், பம்பாய் 'சர்ச் கேட்'டில் இருந்த "ரிட்ஸ்" ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்காக சென்றிருந்த பொழுது அவர் மற்றொரு புதிய வணிகத்தை ஆரம்பிக்க நேர்ந்தது.



ஓட்டலுக்கு தன் உதவியாளர்களுடன் சென்று அறைகள் வேண்டுமென்று கேட்டார். வரவேற்பாளர் அழகப்பர் முகத்திலுள்ள தழும்புகளைப் பார்த்துவிட்டு அறைகள் நிரம்பிவிட்டது உங்களுக்கு இல்லை என்றார். அழகப்ப செட்டியாரும் அவர் உதவியாளர்களும் முகப்பு வரவேற்பு அறையில் அமர்ந்து மாற்று வழி பற்றி பேசிக் கொண்டிருந்தனர், பின்னர் ஒரு தளத்தில் உள்ள அத்தனை அறைகளையும் தான் எடுத்து கொள்வதாக சொன்னார். வரவேற்பாளர் மீண்டும் அறைகள் இல்லை என்பதையே கூறினார்.

ஓட்டலின் மேலாளர் ஒரு ஐரோப்பியர், அவர் அழகப்ப செட்டியாரை அவமதிக்கும் விதமாக "இங்கு ஒரு அறை கிடைப்பதற்கு நீ இந்த ஓட்டலையே விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்" என்றார்.

இதை சவாலாக ஏற்றுக்கொண்டு அன்றே தன் நண்பர்கள் மூலமாக ரிட்ஸ் ஓட்டல் உரிமையாளரைக் கண்டுபிடித்தது ஓட்டலை விலைக்கு வாங்கினார்.

அடுத்த நாள் ரிட்ஸ் ஓட்டல் உரிமையாளராக உள்ளே சென்ற அழகப்ப செட்டியார் "நான் இப்பொழுது இந்த ஓட்டலின் உரிமையாளர் எனக்கு ஒரு அறை கிடைக்குமா?"என்றார். செட்டியாரின் கேள்வியைக் கேட்டு அதிர்ந்து போன வரவேற்பாளரையும் மேலாளரையும் மன்னித்து, அறிவுரை கூறி தங்கள் பணியை தொடர சொன்னார்.
இப்படியாக உயர்தர வசதிகளுடனும் நற்பெயருடனும்  ஐரோப்பிய பாணியில் செயல்பட்டு வந்தது ரிட்ஸ் ஓட்டல்.

அழகப்ப செட்டியார் மனதில்
சாமானிய நடுத்தர மக்கள் தங்கும் வகையில் பம்பாயில் ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக
'சர்ச் கேட்டி'லிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள "மரைன்லைன்ஸ்"அருகில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தை வாங்கி "ஓட்டல் வெஸ்ட் என்ட்" என்ற புதிய ஓட்டலை உருவாக்கினார்.



ஒரு ஓட்டலில் அறை மறுக்கப்பட்டதால் அந்த ஓட்டல் உட்பட இரண்டு ஓட்டல்களின் அதிபரானார் அழகப்ப செட்டியார் என்பது ஆச்சரியமான தகவல்.

அழகப்பா பல்கலைக்கழகம்

பின்னர் 1953ல் அவருடைய கல்வி நிறுவனங்களுக்கான கட்டிடங்களுக்கு நிதி தேவைப்பட்டதால் இரண்டு ஓட்டல்களையும் விற்றுவிட்டார்.

Kailash PL

Wednesday, October 23, 2019

அழகப்பா கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட கதை



காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் பிறந்த
'தமிழ்கடல்' இராய.சொ என்கின்ற இராய.சொக்கலிங்கம் செட்டியார் 1939ஆம் ஆண்டு காரைக்குடி நகரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது "காந்தி மாளிகை" என்னும் பெயரில் நகரவைக் கட்டிடம் ஒன்றை கட்டினார் திறப்பு விழாவுக்கு வருகை தந்த அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சி முதல்வர் இராஜாஜி "இது ஒரு நகராட்சிக்கு மிகவும் நல்லது, ஒரு நாள் இந்த கட்டிடம் ஒரு கல்லூரியாகவோ மருத்துவமனையாகவோ மாறும் என்று நம்புகிறேன்" என்றார்.




இராஜாஜியின் வாக்கு உண்மையானது வள்ளல் இராம.அழகப்ப செட்டியார் அவர்களால் ஆகஸ்ட் 11 1947ஆம் ஆண்டு காந்தி மாளிகை கட்டிடத்தில் மாத வாடகை 2400ரூபாய்க்கு "அழகப்பா கலை கல்லூரி" தொடங்கப்பட்டது பின்பு
1948ல் கல்லூரி புது கட்டிடத்து மாற்றப்பட்டது.


தற்போது காந்தி மாளிகை கட்டிடம் அரசு மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது.

-Kailash PL

Source : Alagappa A Beautiful Mind
BOOK by Dr.Ramanathan Vairavan.

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...