Followers

Tuesday, April 7, 2020

வள்ளல் அழகப்பர் பிறந்தநாளும் இறந்தநாளும்...

அழகப்ப செட்டியார் 
ள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் சென்னை வேப்பேரியில் உள்ள தனது இல்லமான கிருஷ்ண விலாஸில் 05.04.1957ல் மறைந்தார். 

அடுத்த நாள், 06.04.1957 அவரது 48ஆவது பிறந்தநாளன்று, அவருடைய பூதவுடல் கோட்டையூர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. 



மரியாதை நிமித்தமாக, அழகப்பர் தொடங்கி வைத்த அணைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. காரைக்குடி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு அழகப்பர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.



இறுதி ஊர்வலமானது காரைக்குடி வீதிகளில் சுற்றி அழகப்பாபுரம் சென்றடைந்தது, அழகப்பரின் ஆசைப்படி அவர் முன்பே குறிப்பிட்ட இடத்தில், இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 6 மணியளவில் அவரது அண்ணன் மகன் இராம.நாச்சியப்பன் சிதைக்குத் தீ மூட்டினார்.

இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவேன்றால் வள்ளல் டாக்டர் இராம.அழகப்ப செட்டியார் பிறந்த நாளும் எரியூட்டப்பட்ட நாளும் ஒரேநாள். 
••••••••

இத்தகவல் வள்ளல் அழகப்பரின் பேரன் திரு.இராமநாதன் வைரவன் எழுதிய Alagappa:A Beautiful Mind புத்தகத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 6) வள்ளல் இராம.அழகப்ப செட்டியாரின் 111வது பிறந்தநாள்.

பதிவு: Kailash PL
06.04.2020



No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...