Followers

Thursday, April 30, 2020

சம்போவுக்கு என்றும் தடையில்லை.

ஓம் நமசிவாய 

இந்துக்களின் புனித தலமான காசியில், கி.பி 1813முதல் காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் அன்று முதல் இன்று வரை, வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இது "சம்போ" என்று அழைக்கப்படுகிறது. "சம்போ சம்போ மகாதேவா" என்று கூவி கொண்டு செல்வதால் இப்பெயர் வந்தது.

"பஞ்சாப் மெயில் தவறினாலும், நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை" என்பது வாரணாசி பழமொழி.

இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை, எமர்ஜென்சி காலத்தில் கூட தவறியதில்லை, தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காலத்திலும் விஸ்வநாதருக்கு நாள் தோறும் பூஜைகள் நடக்கின்றன, அதற்கான பொருட்கள் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றது. தகவல் தந்த  காசி சத்திர மேலாண்மை கழகத் தலைவர் பழ.இராமசாமி அவர்களுக்கு நன்றி.

Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...