Followers

Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Thursday, April 23, 2020

பாரன்ஹீட் 451

  பிரான்சுவா ட்ரூஃபாட் இயக்கத்தில் 1966ல் வெளியான படம் "பாரன்ஹீட் 451". புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் "ரே பிராட்பரி" எழுதிய முதல் புத்தகமான "பாரன்ஹீட் 451" 1953ல் வெளியானது, அப்புதினத்தின் தழுவலே இப்படம்.

பாரன்ஹீட் 451 என்பது காகிதம் தானாகவே எரிய தேவைப்படும் தோராயமான வெப்பநிலை. 

 வரலாறு நெடுகிலும் பல்வேறு நாடுகளில் புத்தகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, புத்தகத்தை எழுதியவர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், புத்தகத்தை எரித்தவர்களும் எரிக்கப்பட்டிருகிறார்கள். இப்படி புத்தக எரிப்பின் கதை தான் இது.

 கதை நடப்பது வருங்காலத்தில், டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு நகரில். அங்கு புத்தகங்கள் படிப்பதும் வைத்திருப்பதும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறி யாராவது புத்தகம் வைத்திருந்தார்கள் என்றால் அவர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்து, அவர்களது புத்தகங்களை உடனடியாகத் தீ வைத்து எரித்துவிடுவார்கள். அப்படி தீ வைத்து எரிப்பதற்கென்று தனியே ஒரு தீ எரிப்புத் துறை இருக்கிறது. அதில்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை பார்க்கிறான். எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையினருக்கு தகவல் அனுப்பப்படும். தீ எரிப்புத் துறை வீரர்கள் அங்கே சென்று புத்தகங்களைக் கொளுத்தி விடுவார்கள்.

 ஒரு நாள், வயதான பெண்மணி ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியை தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக், அந்த வரியின் ஈர்ப்பில் அந்த புத்தகத்தைத் திருடிக்கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறி அந்த வயதான பெண்மணி, புத்தகங்களுடன் சேர்ந்து தன்னைக் கொளுத்திக் கொள்கிறாள்.

 புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்து கொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் பிறகு தீவைக்கச் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். படித்து முடித்த புத்தகங்களைப் யாருக்கும் தெரியாமல் வீட்டினுள் ஒளித்துவைக்கிறான்.

புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரைத் தேடிப் போகிறான், இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள். மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்துகொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விடயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார்.

 ஒரு கட்டத்தில் மாண்டெக் புத்தகம் படிக்கும் விஷயம் அவன் மனைவியினால் அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப்படுகிறான். உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைந்து, நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினருடன் சேர்ந்துகொள்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தந்த புத்தகத்தின் நடமாடும் வடிவமாக அவர்கள் இருக்கிறார்கள்.

 ஆக உலகில் இருந்து புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அவர்களின் நினைவில் அந்தப் புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகிவிடுகிறான்.

KAILASH PL


Tuesday, April 7, 2020

உலகின் முதல் மதம் இந்து மதம்!!!

நரசிம்மரா?!

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிலேயே மிக பழமை வாய்ந்தது "சிங்க மனிதன்"(lion-man) சிலை.

இது ஜெர்மனியில் உள்ள ஹோலென்ஸ்டீன்-ஸ்டேடல் (Hohlenstein-Stadel) குகையில் 1939ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது, யானைத் தந்தத்தில் செதுக்கப்பட்ட இந்த சிங்க மனிதன் சிலை சுமார் 32,000 முதல் 40,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
LION MAN


இதுவே மனிதன் வணங்கிய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய எழுத்தாளர் யூவால் நுவா அராரி தனது "சேப்பியன்ஸ்" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Sapiens- A Brief History Of Humankind


Friday, March 27, 2020

அரிக்கேன் விளக்கு

அரிக்கேன் விளக்கை ஏன் அரிக்கேன் விளக்கு என்று அழைக்கிறோம்?


எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு, ஒரு கதை உண்டு.

மின் விளக்குகள் பிரபலமாகாத காலத்தில், பிரிட்டன் நிறுவனம் ஒன்று கண்ணாடி பொருத்தப்பட்ட மண்ணெண்ணெய் விளக்கை(Kerosene lamp) இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. அப்போது "இந்த விளக்கு சாதாரணக் காற்றில் மட்டுமல்ல ஹரிக்கேன் காற்றிலும் கூட அணையாது." என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஹரிக்கேன்(Hurricane) என்றால் சூறாவளி எனப் பொருள்.
இந்த விளம்பரத்தின் வெற்றியால்தான் நாம் மண்ணெண்ணெய் விளக்கை 'அரிக்கேன் விளக்கு' என்று அழைத்து வருகிறோம்.

Kailash PL

Sunday, August 25, 2019

சென்னை தினம் கொண்டாட இவர் தான் காரணம்.!

Madras Day 


S Muthiah 

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள்.
இந்நாள் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முழு காரணகர்த்தாவாக இருந்தவர் மறைந்த வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.

எஸ்.முத்தையா

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் 1930 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை என்.எம்.சுப்பையா செட்டியார் சிலோன் இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இலங்கையில் கொழும்பு மாநகர மேயராக இருந்தார். முத்தையா தனது பள்ளி கல்வியை இந்தியாவிலும் பின் கொழும்புவிலும் முடித்தார். ஐக்கிய அமெரிக்காவில் தந்தையின் விருப்பத்தின் பேரில் கட்டடப் பொறியியலும், தன் விருப்பத்திற்காக அரசியல் அறிவியலிலும்(political science) முதுகலை பட்டம் பெற்றார்.1951 இல் இலங்கை திரும்பிய பின் டைம்ஸ் ஒஃப் சிலோன் (Times of Ceylon) பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணி புரிந்து இறுதியில் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். இலங்கையில்1968 ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் இறுக்கமான போது தனது பதவியைத் துறந்து இந்தியா திரும்பினார்.

முத்தையா மெட்ராஸ் நகரில் குடியேறியபின்பு 1981ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரின் சுற்றுலா வழிகாட்டிகளைத் தயாரிக்க அவர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மெட்ராஸ் டிஸ்கவர்ட் (Madras Discovered)என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார்.
இலங்கை, சென்னை, செட்டிநாடு கட்டடக் கலை வரலாறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களை தன் வாழ்நாளில் எழுதி சாதனைபடைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தன் 89வயதில் காலமானார்.

Kailash PL




செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...