Followers

Sunday, August 25, 2019

சென்னை தினம் கொண்டாட இவர் தான் காரணம்.!

Madras Day 


S Muthiah 

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள்.
இந்நாள் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முழு காரணகர்த்தாவாக இருந்தவர் மறைந்த வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.

எஸ்.முத்தையா

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் 1930 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை என்.எம்.சுப்பையா செட்டியார் சிலோன் இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இலங்கையில் கொழும்பு மாநகர மேயராக இருந்தார். முத்தையா தனது பள்ளி கல்வியை இந்தியாவிலும் பின் கொழும்புவிலும் முடித்தார். ஐக்கிய அமெரிக்காவில் தந்தையின் விருப்பத்தின் பேரில் கட்டடப் பொறியியலும், தன் விருப்பத்திற்காக அரசியல் அறிவியலிலும்(political science) முதுகலை பட்டம் பெற்றார்.1951 இல் இலங்கை திரும்பிய பின் டைம்ஸ் ஒஃப் சிலோன் (Times of Ceylon) பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணி புரிந்து இறுதியில் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். இலங்கையில்1968 ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் இறுக்கமான போது தனது பதவியைத் துறந்து இந்தியா திரும்பினார்.

முத்தையா மெட்ராஸ் நகரில் குடியேறியபின்பு 1981ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரின் சுற்றுலா வழிகாட்டிகளைத் தயாரிக்க அவர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மெட்ராஸ் டிஸ்கவர்ட் (Madras Discovered)என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார்.
இலங்கை, சென்னை, செட்டிநாடு கட்டடக் கலை வரலாறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களை தன் வாழ்நாளில் எழுதி சாதனைபடைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தன் 89வயதில் காலமானார்.

Kailash PL




No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...