Followers

Sunday, August 11, 2019

உப்பு - சீனப் புராண கதை.




உப்பு எப்படி வந்தது என்பதுக்கு சீனாவில் ஒரு புராண கதை இருக்கிறது.


வானத்திலிருந்து விசித்திரமான பறவை ஒன்று பூமிக்கு தரையிறங்கி வந்து மண்ணை கொத்தி கொண்டிருந்தது. அந்த பக்கம் சென்ற மீனவன் ஒருவன் அந்த விசித்திரமான பறவையை பிடிக்க முயலுகிறான் ஆனால் பறவை பறந்து சென்று விடுகிறது. பறவை கொத்திய இடத்தில் சாம்பல் நிறத்தில் சிறு சிறு கட்டிகளாக ஏதோ கிடந்தன. அதை புதையல் என்று நினைத்து எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு சென்றான். மீனவன் மனைவி இதை புதையல் என்று நம்ப மறுக்கிறாள்.

அடுத்த நாள் காலை மீனவன் புதையலை அரசரிடம் கொடுத்து தக்க சன்மானம் பெறப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு அரண்மனை நோக்கி செல்கிறான்.
அரண்மனை தர்பாரில் இருந்த அரசர் அந்த சாம்பல் நிற மண்கட்டி போன்ற பொருளை பார்த்து "இதை எதற்காக கொண்டு வந்தாய்?" என்று கேட்க, "இது ஒரு புதையல்! அரசே"என்றான் மீனவன். அரசருக்கு பயங்கரமாக கோபம் வர "இந்த மண்கட்டியை தூக்கி எறிந்துவிட்டு, இவனை சிறையில் அடையுங்கள்" என்றார். மீனவனை சிறையில் அடைத்துவிட்டு அந்த மண்கட்டியை ஒரு வீரன் தூக்கி எறிந்தான் அதில் கொஞ்சம் தவறி சமைத்துக்கொண்டு இருந்த உணவில் விழுந்துவிடுகிறது. அந்த உணவை உண்ட அரசர் "இப்படி ஒரு ருசியான உணவை நான் ஒரு போதும் சாப்பிட்டதில்லை" என்று புகழ்ந்து தள்ள. சமையல்காரன் நடந்த உண்மையை சொல்கிறான். உடனே அரசர் அந்த மீனவனை விடுவித்து "எந்த இடத்தில் இந்த மண்கட்டி கிடைத்தது?" என்று கேட்டு, வீரர்களை அனுப்பி சேகரித்து வர செய்கிறார். அப்படி ஒரு விசித்திரமான பறவை காட்டிக்கொடுத்த பொருள் தான் உப்பு! என்று முடிகிறது சீனக் கதை.

-kailash PL 



No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...