Followers

Sunday, August 25, 2019

சென்னை தினம் கொண்டாட இவர் தான் காரணம்.!

Madras Day 


S Muthiah 

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள்.
இந்நாள் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முழு காரணகர்த்தாவாக இருந்தவர் மறைந்த வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.

எஸ்.முத்தையா

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் 1930 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை என்.எம்.சுப்பையா செட்டியார் சிலோன் இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் இலங்கையில் கொழும்பு மாநகர மேயராக இருந்தார். முத்தையா தனது பள்ளி கல்வியை இந்தியாவிலும் பின் கொழும்புவிலும் முடித்தார். ஐக்கிய அமெரிக்காவில் தந்தையின் விருப்பத்தின் பேரில் கட்டடப் பொறியியலும், தன் விருப்பத்திற்காக அரசியல் அறிவியலிலும்(political science) முதுகலை பட்டம் பெற்றார்.1951 இல் இலங்கை திரும்பிய பின் டைம்ஸ் ஒஃப் சிலோன் (Times of Ceylon) பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணி புரிந்து இறுதியில் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். இலங்கையில்1968 ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் இறுக்கமான போது தனது பதவியைத் துறந்து இந்தியா திரும்பினார்.

முத்தையா மெட்ராஸ் நகரில் குடியேறியபின்பு 1981ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரின் சுற்றுலா வழிகாட்டிகளைத் தயாரிக்க அவர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மெட்ராஸ் டிஸ்கவர்ட் (Madras Discovered)என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார்.
இலங்கை, சென்னை, செட்டிநாடு கட்டடக் கலை வரலாறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களை தன் வாழ்நாளில் எழுதி சாதனைபடைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தன் 89வயதில் காலமானார்.

Kailash PL




Sunday, August 11, 2019

உப்பு - சீனப் புராண கதை.




உப்பு எப்படி வந்தது என்பதுக்கு சீனாவில் ஒரு புராண கதை இருக்கிறது.


வானத்திலிருந்து விசித்திரமான பறவை ஒன்று பூமிக்கு தரையிறங்கி வந்து மண்ணை கொத்தி கொண்டிருந்தது. அந்த பக்கம் சென்ற மீனவன் ஒருவன் அந்த விசித்திரமான பறவையை பிடிக்க முயலுகிறான் ஆனால் பறவை பறந்து சென்று விடுகிறது. பறவை கொத்திய இடத்தில் சாம்பல் நிறத்தில் சிறு சிறு கட்டிகளாக ஏதோ கிடந்தன. அதை புதையல் என்று நினைத்து எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு சென்றான். மீனவன் மனைவி இதை புதையல் என்று நம்ப மறுக்கிறாள்.

அடுத்த நாள் காலை மீனவன் புதையலை அரசரிடம் கொடுத்து தக்க சன்மானம் பெறப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு அரண்மனை நோக்கி செல்கிறான்.
அரண்மனை தர்பாரில் இருந்த அரசர் அந்த சாம்பல் நிற மண்கட்டி போன்ற பொருளை பார்த்து "இதை எதற்காக கொண்டு வந்தாய்?" என்று கேட்க, "இது ஒரு புதையல்! அரசே"என்றான் மீனவன். அரசருக்கு பயங்கரமாக கோபம் வர "இந்த மண்கட்டியை தூக்கி எறிந்துவிட்டு, இவனை சிறையில் அடையுங்கள்" என்றார். மீனவனை சிறையில் அடைத்துவிட்டு அந்த மண்கட்டியை ஒரு வீரன் தூக்கி எறிந்தான் அதில் கொஞ்சம் தவறி சமைத்துக்கொண்டு இருந்த உணவில் விழுந்துவிடுகிறது. அந்த உணவை உண்ட அரசர் "இப்படி ஒரு ருசியான உணவை நான் ஒரு போதும் சாப்பிட்டதில்லை" என்று புகழ்ந்து தள்ள. சமையல்காரன் நடந்த உண்மையை சொல்கிறான். உடனே அரசர் அந்த மீனவனை விடுவித்து "எந்த இடத்தில் இந்த மண்கட்டி கிடைத்தது?" என்று கேட்டு, வீரர்களை அனுப்பி சேகரித்து வர செய்கிறார். அப்படி ஒரு விசித்திரமான பறவை காட்டிக்கொடுத்த பொருள் தான் உப்பு! என்று முடிகிறது சீனக் கதை.

-kailash PL 



Tuesday, August 6, 2019

இலவசம் என்பதை ஏன் ஓசி என்கிறோம்?

ஓசி = இலவசம்

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த போது தபால் துறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது இருப்பதை போலவே அப்போதும் தபால் உறையில் தபால் தலை ஒட்டும் வழக்கம் இருந்தது. தபால் தலைக்கு கட்டணம் உண்டு.

ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனி தொடர்பான தபால்களை இலவசமாக அனுப்ப தபாலின் உறையில் OCS(On Company Service) என்று சுருக்கமாக எழுதி அனுப்புவார்கள்.

OCS என்பது நாளடைவில் நம் வாழ்க்கையில் இரட்டுற கலந்து OC ஆக மருவி போனது. பின் இலவசம் என்பதற்கு ஓசி என்ற பெயரும் நிலைத்துப் போனது. இன்று காரணம் தெரியாமலே பெரும்பாலான மக்கள் இலவசம் என்பதற்கு ஓசி என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்.



நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...