Followers

Tuesday, October 1, 2019

பிரதாப முதலியார் சரித்திரம்



"பிரதாப முதலியார் சரித்திரம்"


 மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களால் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான புதினம்.தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாக கொண்டிருந்த தமிழிற்கு வேதநாயகம் பிள்ளை புதினத்தை அறிமுகப்படுத்தினார்.

பிரதாப முதலியார் என்கிற கற்பனை கதாபாத்திரத்தை கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. பிரதாப முதலியார் ஞானாம்பாளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதே கதை சுருக்கம்.

இந்த புதினம் மூன்றாம் பார்வையில் எழுதப்படாமல், பிரதாப முதலியாரின் கூற்றிலேயே சொல்லப்படுகிறது.

கதை ஆரம்பித்து முதல் பத்து அத்தியாயங்களும் கல்வியின் முக்கியத்தையும் பெண்கள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தையும் சொல்கிறது. (கதை நடப்பது 1800கள் ஆரம்பம்)

கதையில் சில இடங்களில் கம்பராமாயண செய்யுளை காட்டி கதையை விளக்குகிறார். "விதவை" என்பதை "கைம்பெண்" என எழுதியுள்ளார். கதை எழுதப்பட்ட காலத்தில் நடந்த அமெரிக்க அடிமை வாழ்க்கையை பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

கதையின் நடுவில் பல குறுங்கதைகள் வருகின்றன அதில் ஒரு கதையில் அனந்தன் என்பவன் தமிழை கற்காமல் தவிர்த்து ஆங்கிலம் மட்டும் கற்று பின் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறான். தமிழின் முக்கியத்துவம் பற்றி அப்போதே இந்த கதையில் சொல்லுகிறார் மற்றும் பல நகைச்சுவை கதைகள் நடு நடுவே வருகிறது.

பாலியல் திருமணம் வேண்டா, திருமணத்தில் இருவர் சம்மதம், ஐரோப்பா, புருசியா, ரோமாபுரி, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் கதை. அக்காலத்தில் அரசு உத்தியோகத்தினர் செய்யும் ஊழல்கள், யாருக்கும் புரியா ஆங்கிலத்தில் வாதாடும் வக்கீல்கள் என பலதரப்பட்ட விஷயங்களை கதை பேசுகிறது.

 “இக்காலத்தில்(1800கள்) கலி முத்திப் போச்சு” என்று சலித்துக்கொள்ளும் வசனங்களும்  வருகிறது.

இந்த கதையை ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும் அது என்னவென்றால் " பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம்"

FIRST NOVEL IN TAMIL LANGUAGE.

Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...