ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து இரவு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சம்போ காட்சி.
" பஞ்சாப் மெயில் தவறினாலும் நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை " என்பது காசி பழமொழி.
காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது.
அவை உஷத்கால பூஜை, உச்சிகால பூஜை, அர்த்தசாம பூஜை.
அதற்கான அத்தனை பூஜை பொருட்கள், அபிஷேக பொருட்கள், அலங்கார பொருட்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து தினமும் இரண்டு முறை எடுத்து செல்லப்படுகிறது. இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை. எமர்ஜென்சி காலத்தில் கூட தவறியதில்லை.
காலை 10.30க்கும் இரவு 9.30க்கும் சத்திரத்தில் இருந்து முறைப்படி எடுத்து செல்லப்படுகிறது. குளிர் காலங்களில் காலை மாலை நேரங்கள் (30min) மாறும்.
அதிகாலை உஷத்காலப் பூஜைக்கு தேவையான பொருட்கள் இரவே காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.
உச்சிகாலப் பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்:
வாசனைத் தைலம், தேன், பன்னீர், ஊதுபத்தி, சூடம், அத்தர், பழுப்பு சர்க்கரை, திருநீறு, சந்தனம், வில்வம், அறுகம்புல், பூமாலை, பால், தயிர், பஞ்சாமிர்தம், பிரயாகை தீர்த்தம், மங்கள அட்சதை கொண்டு செல்லப்படுகிறது.
அர்த்தசாம பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்
மேற்கண்ட பொருட்களுடன் சவ்வாது, பட்டு, ஆபரணம், பால் அண்டா, பூக்கூடை, ஆரத்தி பொருட்கள் (வெள்ளி சாமான்கள்) அனைத்தும் கொண்டு செல்லப்படுகிறது .
சம்போ வீடியோ காட்சிகள்
ஒவ்வொரு நாளும் இரண்டு முறை ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து சம்போ காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்கிறது.
" பஞ்சாப் மெயில் தவறினாலும் நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை " என்பது காசி பழமொழி.
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம்
காசி விஸ்வநாதர்
சம்போ என்றால் என்ன?
சம்போ என்பது சமஸ்கிருத சொல் இதன் அர்த்தம் சிவபெருமானைக் குறிக்கும்.காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது.
அவை உஷத்கால பூஜை, உச்சிகால பூஜை, அர்த்தசாம பூஜை.
அதற்கான அத்தனை பூஜை பொருட்கள், அபிஷேக பொருட்கள், அலங்கார பொருட்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து தினமும் இரண்டு முறை எடுத்து செல்லப்படுகிறது. இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை. எமர்ஜென்சி காலத்தில் கூட தவறியதில்லை.
காலை 10.30க்கும் இரவு 9.30க்கும் சத்திரத்தில் இருந்து முறைப்படி எடுத்து செல்லப்படுகிறது. குளிர் காலங்களில் காலை மாலை நேரங்கள் (30min) மாறும்.
அதிகாலை உஷத்காலப் பூஜைக்கு தேவையான பொருட்கள் இரவே காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.
உச்சிகாலப் பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்:
வாசனைத் தைலம், தேன், பன்னீர், ஊதுபத்தி, சூடம், அத்தர், பழுப்பு சர்க்கரை, திருநீறு, சந்தனம், வில்வம், அறுகம்புல், பூமாலை, பால், தயிர், பஞ்சாமிர்தம், பிரயாகை தீர்த்தம், மங்கள அட்சதை கொண்டு செல்லப்படுகிறது.
சம்போவுக்கு தயாராக இருக்கும் பொருட்கள்.
சம்போவுக்காக சந்தனம் அரைக்கும் காட்சி.
அர்த்தசாம பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்
மேற்கண்ட பொருட்களுடன் சவ்வாது, பட்டு, ஆபரணம், பால் அண்டா, பூக்கூடை, ஆரத்தி பொருட்கள் (வெள்ளி சாமான்கள்) அனைத்தும் கொண்டு செல்லப்படுகிறது .
சம்போ வீடியோ காட்சிகள்
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து சம்போ செல்லும் காட்சி.
No comments:
Post a Comment