Followers

Tuesday, July 16, 2019

புகார் நகரத்துப் பெருவணிகன்.


'குமரிக்கண்டமா சுமேரியமா?’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதிய பா.பிரபாகரனின் "புகார் நகரத்துப் பெருவணிகன்"நாவல் ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதையை விவரிக்கிறது.
இதில் மன்னர்கள் வருகிறார்கள் என்றாலும் கதை அவர்களைப் பற்றியது அல்ல மக்களே இதில் பிரதானம் குறிப்பாக இது ஆயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தன வணிகர்களின் கதை.

சோழ நாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் எனும் புகார் நகரை மையமாக கொண்டு கதை நகர்கிறது.

இது ஒரு கற்பனை கதை என்றபோதும் தகவல் களஞ்சியமாக திகழ்கிறது.

இதோ அதில் சில தகவல்கள்.

⚫அந்த காலத்திலேயே சோழ நாட்டில் சுங்க சாவடிகள்(Toll gate) இருந்துள்ளன.வணிகர்கள் ஏற்றி செல்லும் பொருட்களுக்கு தகுந்தாற்போல் வரி கட்ட வேண்டும். ரசீது ஓலை சுவடிகளில் வழங்கப்பட்டும்.

⚫சோழ நாட்டில்
•செப்பு காசு
•காணம்(வெள்ளியால் செய்ய பட்டது)
•கழஞ்சு(தங்கத்தால் செய்ய பட்டது)
என மூன்று விதமான நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.

⚫அன்று இருந்த மது வகைகள்.
•கள்
•காடி
இவைகள் ஏழை எளிய மக்களுக்கு.

•வடிகள்
•தேறல்
இவைகள் உயர் குடியியினருக்கு.

⚫சோழ நாட்டில் வழங்கப்படும் பட்டங்கள்

•எட்டி
•காவிதி
என்பவை வணிகர்களுக்கு.

•கிழார்
•கிழான்
என்பவை புலவர்களுக்கு.

•ஏனாதி
•மாராயன்
என்பவை வீரர்களுக்கு.

•குவளை
•தாமரை
என்பவை கலைஞர்களுக்கு.

•தலைக்கோல் பட்டம்
அனைத்திலும் சிறந்த நபருக்கு வழங்கபடும்.

⚫வெளிநாடுகளில் வணிகம் செய்பவன் நாய்கன் என்றும் அதே பெரும் வணிகம் செய்பவன் மாநாய்கன் என்று அழைப்பது வழக்கம்.
உள்நாட்டில் வணிகம் செய்பவன் சாந்தன் என அழைக்கப்படுவான் .
பொதுவில் செட்டியார் எனப்படுவார்கள் இது எட்டி எனும் பட்டத்தில் இருந்து செட்டி என மருவியதாகும்.
50க்கும் மேற்பட்ட கலங்கள்(கப்பல்கள்) உடையவன் நாய்கன். அதே 100க்கும் மேற்பட்ட கலங்கள் உடையவன் மாநாய்கன்.

⚫தெப்பம் பரிசல் புனை ஓடம் படகு நாவாய் பஃறி என 23 வகை கலங்கள் உள்ளன
•பஃறி என்பது ஒரு பாய் மரமுள்ள கலம் இதில் கரையோரம் மட்டுமே பயணம் செய்யலாம்.
•நாவாய் என்பது நான்கும் அதற்கு மேற்பட்ட பாய் மரமுள்ள கலம் இதில் நடுக்கடலில் பயணம் மேற்கொள்ளலாம்.

மற்றும் கப்பல்கள் எப்படி கட்டப்படுகின்றன? எப்படி மீன்களை பார்த்து திசைகளை கண்டனர்? எப்படி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்? எந்த எந்த நாட்டினரிடையே தமிழர் வணிகம் செய்தனர்? கடாரம் எப்படி இருக்கும்? சீனம் எப்படி இருக்கும்? என பல அறிய தகவல்களை நமக்களிக்கிறது இந்த புத்தகம்.

- Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...