Followers

Monday, July 15, 2019

மறந்து போன தமிழ்


குறிப்பாக குளிர் காலங்களில் என் அப்பத்தா சொல்லும் வாக்கியம் இது
"வளவுல படுக்காத அப்பச்சி வாட காத்தடிக்கும் அறைக்குள்ள போய் ஒறங்கு"



இந்த வாட காத்துக்கு(வாடை காற்றுக்கு)என்ன அர்த்தமென்று அப்பதெரியாது.
இன்று ஒரு புத்தகத்தின் மூலம் இதன் அர்த்தம் விளங்கியது.

அதாவது
இரவு நேரத்தில்
வடக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் வாடை. இது குளுமையாக இருக்கும்.

அதேபோல்
மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் கச்சான்.

கிழக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் கொண்டல்.

தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் சோழகம்.

இதே மாலை நேரத்தில்
தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் தென்றல் இது மென்மையாக இருக்கும். இதை தான் இளையராஜா " தென்றல் வந்து தீண்டும் போது......" என பாடினாரோ என்னமோ.

வாடை, கச்சான், கொண்டல், சோழகம்,
இந்த வார்த்தைகளெல்லாம் பண்டைய காலங்களில் கடலோடிகளும் தன வணிகர்களும் கப்பலில் செல்லும் போது காற்றை குறிக்க பயன்படுத்திய தமிழ்  வார்த்தைகள் ஆகும்.


- Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...