Followers

Tuesday, July 16, 2019

என் இனிய இயந்திரா


சுஜாதா வின் ஆக சிறந்த  படைப்புகளில் ஒன்று.

1985ல் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை இது.

இயக்குனர் ஷங்கர் எந்நிரன் படம் எடுக்க அடிப்படையாக இருந்த கதை.

கதை சுருக்கம் :

கி.பி 2022 இல் இந்தியா ஜீவா எனும் சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் உள்ளது. தேசத்தில் எங்கும்  லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கையும் கிடையாது . அனைவருக்கும் ஒரு நம்பர் ஒதுக்கபட்டுயிருக்கும் வெளியில் பெயருக்கு பதிலாக நம்பரை பயன் படுத்தவேண்டும்.

இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான்.  ஜீவாவிடமிருந்து இந்த நாட்டை மீட்க புறப்படும் ரவி, மனோ எனும் இரு புரட்சிக்காரர்களுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் இணைந்து கொள்ளும் நிலா நிலாவுக்கு நண்பனாக மாறும் ரவியின் இயந்திர நாய் இவர்களை சுற்றியே கதை நகர்கிறது.

இந்தக் கதையில் முக்கியமான பாத்திரமான ஜீனோ எனும் இயந்திர நாய் மெல்ல மெல்ல தன் அறிவை விருத்தி செய்வதுடன் மனிதர்களைப் போல சிந்திக்கவும் தொடங்குகின்றது. ஆரம்பத்தில் பயம், இரக்கம், பாசம் போன்ற உணர்வுகளை அறியாதிருந்த நாய் மெல்ல மெல்ல அனைத்து மனித இயல்புகளையும் பெறத் தொடங்குகின்றது.

பின்பு சிபியை நிலா கண்டு பிடித்தாலா ஜீவா என்ன ஆனார்
புரட்சி என்ன ஆனது என்று  ஏகப்பட்ட திருப்பங்களுடன் சென்று கதை நிறைவடைகிறது.

(பாகம் இரண்டு தனியாக உள்ளது அதன் பெயர் "மீண்டும் ஜீனோ")
*****************

அப்போதே (1985ல்) சுஜாதா  வீடியோ கால், வீ வீ திரை, ஹோலோ பிம்பம், பறக்கும் தட்டு இன்னும் பல அறிவியல் சாதனங்களை பற்றி யோசித்து கதையில் எழுதியுள்ளார்.
ஜனத்தொகை 125 கோடி என்கிறார்  இது கிட்ட தட்ட நம் தற்போதைய ஜனத்தொகையை குறிக்கிறது.

வருங்கால அறிவியல் பற்றி துள்ளியமாக கணித்துள்ளார்.

 2022 வருவதற்குள் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய நாவல் இது.

- Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...