Followers

Wednesday, July 17, 2019

காசியில் பாரதி வாழ்ந்த வீடு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காசியில் வாழ்ந்த வீடு.


"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே! இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே!"என்றார் பாரதி. 

இதன் மூலம் அவர் கங்கையையும் காசியையும் எந்த அளவு நேசித்துள்ளார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


காசியில் மொத்தம் 64 காட்கள்(ghat) உள்ளன. காட் என்றால் படித்துறை.
அதில் "ஹனுமன் காட்"ல் அதிகளவு  பிராமணர்கள் வசிக்கிறார்கள். ஒருகாலத்தில் இங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண குடும்பங்கள் இருந்துள்ளனர் தற்போது குறைந்து விட்டனர். இவர்களெல்லாம்  ஐந்து தலை முறைக்கு முன்னர் தமிழகத்திலிருந்து காசிக்கு வந்து குடியேறியவர்கள்.

"ஹனுமன் காட்"ல் உள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக "சிவ மடம்" என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழமையான வீடு ஒன்று உள்ளது இந்த வீட்டில் தான் பாரதி தனது 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903)வாழ்ந்தார்.

1898ம் ஆண்டு பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.





காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். பாரதியின் சமஸ்கிருத உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு  வியந்தார்கள்.
கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். இந்த சமயத்தில் தான் பாரதி மீசை வளர்த்து கோட்,தலைப்பாகை அணிந்து தன்னையே மாற்றிக்கொண்டார்.

இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம்.

 தற்போது இந்த வீட்டில் உள்ளவர் பாரதியின் அத்தை பேரன்  KV.கிருஷ்ணன் 93 வயதுடைய இவர் காசி தமிழ் சங்க பிரசிடென்டாக உள்ளார் மற்றும் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழிலும் இந்தியிலும் இசையிலும் புலமை.

பாரதி இங்கு இருந்த போது இவர் பிறக்கவேயில்லை,பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். பின்பு காசி மக்கள் மற்றும் அரசாங்க உதவியுடன் பாரதிக்கு இதே "ஹனுமன் காட்"ல் உள்ள தன் சொந்த நிலத்தில் சிலை அமைக்கவும் செய்தார்.

பின்னர் பாரதியார் சிலையை பராமரிக்கும் பொறுப்பை "ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்"தாரிடம் ஒப்படைத்துள்ளார்.

-Kailash  PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...