Followers

Saturday, July 13, 2019

காசி வரலாற்றுப் பார்வை

காசி


காசி நகரம் இராமாயண, மஹாபாரத காலத்திற்கு முன்பிருந்தே மிகவும் புகழ் பெற்றிருந்த நகரம். ‘ஆனந்த வனம்’ என்ற பெயரும் இப்புராதன நகருக்கு உண்டு சிவன் மிகவும் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் என்பதால் இப்பெயர். ‘அவிமுக்தம்’என்ற பெயரும் உண்டு நிச்சயமாக முக்தியைத் தரும்  ஸ்தலம் இது.
வாராண், அஸ்ஸி என்னும் இரு நதிகளும் இங்கு வந்து கங்கையுடன் கலப்பதால் ‘வாரணாசி’என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
இது சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிலிங்கங்களுள் ஒன்றாகும்.


வரலாறு;


காசி விஸ்வநாதர் கோவில் பல முறை மொகலாய அரசர்களால் இடிக்கப்பட்டு பின்பு இந்து அரசர்களால் பல முறை கட்டப்பட்டுள்ளது. கி.பி 1669ல் அக்பரின் கொள்ளு பேரன் அவுரங்கசீப்பால் விஸ்வநாதர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது மற்றும் இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் 'ஜிஸியா' என்ற வரி விதித்தார். அவுரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.
 தற்போது உள்ள விஸ்வநாதர் கோவில் கி.பி 1777ம் ஆண்டு இந்தூர் ராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட மசூதி தற்போதும் இருக்கிறது. மசூதி இருக்கும் இடம் தற்போது உள்ள விஸ்வநாதர் கோவிலுக்கு நேர் பின்புறம் உள்ளது. இங்கு தான் ஆதி விஸ்வநாதர் சன்னதி இருந்ததாகக் கூறப்படுகிறது இதற்கு ஆதாரமாக ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நந்தி ஒன்று மசூதியை பார்த்து உள்ளது. விஸ்வநாதர் கோவிலை சேர்ந்த  சிருங்கர் மண்டப சுவற்றில் மேல் மசூதி கட்டப்பட்டிருப்பது தற்போதும் கண்கூடாக  தெரிகிறது.


காசி விஸ்வநாதர் கோவில்:



தசாஸ்வேமேத் படித்துறையில் இருந்து   ஒரு குறுகிய தெரு  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்கிறது. கோவிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது.
கி.பி 1813 முதல் காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் அன்று முதல் இன்று வரை நகரத்தாரால் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து நாள் தோறும் அனுப்பப்படுகிறது இது சம்போ எனப்படுகிறது.




கி.பி 1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து தங்கக் கோபுரத்தை அமைத்தார். கி.பி 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர் கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது அதற்கான கவசம் அண்மையில் நகரத்தாரால் அமைக்கப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள அத்தனை கதவுகளும் நகரத்தாரால் அமைக்கப்பட்டுள்ளது "ஓம் நமச்சிவாய" எனவும் 'ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம்' எனவும் தமிழில் எழுதி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.


தாயார் சன்னதி:


விஸ்வநாதர் கோவிலுக்கு உள்ளேயே அன்னபூரணிக்கு தனி சன்னதி உள்ளது இதற்கான வெள்ளி கதவுகள் நகரத்தாரால் அமைக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் அன்னபூரணியும்  விசாலாட்சியும் ஒன்றாகவே மக்களால் கருதப்பட்டு வந்தனர் பின்னர் காசி விசாலாட்சிக்கு தனி கோவில் நகரத்தாரால் கட்டப்பட்டது.

கங்கை ஆர்த்தி;


கங்கை ஆற்றின் கரையில்(தசாஸ்வேமேத் படித்துறையில்) தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை கங்கா ஆர்த்தி என்கின்றனர்.

கும்பாபிஷேகம்

239 ஆண்டுகளுக்குப் பின்னர் நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு குடமுழுக்கு சூலை 5 2018இல் நடைபெற்றது.

-Kailash PL 

( 31.12.2018 அன்று எழுதப்பட்டது)

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...