Followers

Monday, June 29, 2020

காளையார் கோயில் அரிய புகைப்படம்.

காளையார் கோயில் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது. 
நாட்டுக்கோட்டை நகரத்தார் திருப்பணியின் போது 1800கள் இறுதியில் எடுக்கப்பட்டது.


பாண்டிய நாட்டிலுள்ள தேவாரப் பதிகம் பெற்ற தலங்கள் பதினான்கினுள்  "திருக்கானப்பேர்" எனும் "காளையார்கோயில்" ஒன்று.

அதி அற்புதமான இத்தலத்தில் மூன்று இறைவனும் மூன்று  இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லி

சோமேசர் - சவுந்தரவல்லி

சுந்தரேசுவரர் - மீனாட்சி

பலநூறு ஆண்டுகட்கு முன் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோயில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பெற்றும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.

பாண்டியனால் கட்டப்பட்ட 5 நிலைகளைக் கொண்ட 90அடி உயர ராஜ கோபுரமும் அதன் அருகே 18ஆம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்ட 9 நிலைகளைக் கொண்ட 155 1/2அடி உயர இராஜகோபுரமும் உள்ளன.

இத்தலத்தில் நாம் காணும் சுந்தரேசுவரர் - மீனாட்சி கோயில், நூறுகால் மண்டபம் நீங்கலாக ஏனைய சோமேசர்-சவுந்தரவல்லி கோவில், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி கோவில் நகரத்தாரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டும், புதிதாக மண்டபங்களும் சுற்று பிரகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
1800கள் மத்தியில் தொடங்கி 1900கள் தொடக்கம் வரை திருப்பணிகள் நடந்துள்ளது.

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...