Followers

Monday, June 29, 2020

காளையார் கோவில்- ஆனைமடு


இந்த புகைப்படம் 1900கள் தொடக்கத்தில் குளம் கட்டப்பட்ட புதிதில் எடுக்கப்பட்டது.



காளையார் கோயில் தெப்பக்குளம் - கஜபுஷ்கரணி எனும் ஆனைமடு குளம்.

புராண கதைப்படி, "இந்திரனின் வாகனமான ஐராவத யானை மகரிஷி ஒருவர் கொடுத்த சாபம் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டதாகவும், அப்போது தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாகவும், அந்த யானை உண்டாக்கிய பள்ளமே ஆனைமடு என்று சொல்லப்படுகிறது".

இக்குளம் பலநூறு ஆண்டுகட்கு முன் வெட்டப்பட்டது.

1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் "அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார்" அவர்கள் கல் திருப்பணி செய்து, மேலும் அழகு சேர்க்கும் வகையில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் நீராழி மண்டபத்தை ஒத்து இக்குளத்தின் நடுவில் மிக அற்புதமான நீராழி மண்டபம் ஒன்றை புதிதாக நிறுவியுள்ளார்கள்.

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...