Followers
Saturday, April 17, 2021
சுப்பிரமணியஞ் செட்டியார் குருகுலம்.
அக்காலத்தில் இப்படி ஒரு சட்டமா?
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தேவகோட்டை யூனியன் ஆபிசில் 1911ஆம் ஆண்டு பழ.ப.பிச்சப்ப செட்டியார் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள 'குழந்தை வேலன் செட்டி தெரு'வில் 30 அடி நீளத்திற்கும் 3அடி அகலத்திற்கும் உரிய இடத்தில் 31நாட்களுக்கு கட்டிட சாமான்களை வீதியில் போட்டு எடுத்துக் கொள்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். "கட்டிட சாமான்களை வீதியில்ப்போட்டு எடுத்துக்கொள்வதற்கு லைசென்சு" என்ற தலைப்பில் தேவகோட்டை யூனியன் ஆபிஸ் அக்கிராசனாதிபதி (தலைவர்) சில நிபந்தனைகளுடன் 26/07/1911அன்று உரிமம் வழங்கியுள்ளார். அதாவது மக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கட்டிட சாமான்களை தெருவில் போட்டுக் கொள்ளளாம், இரவில் மக்கள் நடமாட போதுமான வெளிச்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை தவறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் இப்படி ஒரு சட்டம் இருந்திருக்கிறது என்பது அனைவரையும் வியப்படைய செய்கிறது.
Subscribe to:
Comments (Atom)
செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...
-
பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டதாக நமக்கு கிடைப்பவை ஆறு புகைப்படங்கள் மட்டுமே. இவற்றுள் இரண்டு புகைப்படங்கள் புதுவையிலும் இரண்டு புகைப்...
-
Special Interview with Michel Adment and Bernard Dragon By Kailash PL Saratha Vilas M any tourists from other sta...