18ஆம் நூற்றாண்டில் அருட்கவியாய் வாழ்ந்த 'பாடுவார் முத்தப்பர்' சிறந்த வணிகராகவும் திகழ்ந்து பொருளீட்டி பல அறப்பணிகள் செய்து வந்துள்ளார். இளையாற்றங்குடி அருகேயுள்ள சேவினிப்பட்டி எனும் ஊரில் மக்களின் தாகம் தீர்க்க குடிதண்ணீர் குளம் ஒன்றை வெட்டி, அதன் மேல்கரையில் கருங்கற்களைக் கொண்டு பிள்ளையார் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். கோவிலினுள் பாடுவார் முத்தப்பருக்கு சிலை உள்ளது. கோவில் இருக்கும் சாலை 'பாடுவார் முத்தப்பர் சாலை' என்றும் குளம் 'செட்டியா(ர்) ஊருணி' என்றும் அழைக்கப்படுகிறது.
பாடுவார் முத்தப்பர் பாடிய விநாயகர் துதி:
" காட்டுவழி போனாலும் கள்ளர்பய மானாலும்
கேட்டுவழிக் காலகனார் கிட்டிலும் - நாட்டமுடன்
நம்பிக்கை யாக நமக்கு வினாயகனின்
தும்பிக்கை உண்டே துணை".
புகைப்படங்கள்: சேவினிப்பட்டியில் (சிவகங்கை மாவட்டம்) 'பாடுவார் முத்தப்பர்' கட்டிய பிள்ளையார் கோவில் மற்றும் ஊருணி.
No comments:
Post a Comment