Followers

Tuesday, May 31, 2022

9 நகரத்தார் கோயில் பழைய புகைப்படங்கள்

வயிரவன்பட்டி வளரொளிநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு(2022) சென்றிருந்த போது வயிரவன் கோவில் நகரத்தார் விடுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஒன்பது கோவில்களின் அரிய பழைய புகைப்படங்களை காண நேர்ந்தது. இதில் சில கோவில்கள் இன்றும் அன்றுள்ளது போலே உள்ளன. சில கோவில்களில் முன் காங்கிரீட் மண்டபம் கட்டப்பட்டுள்ளதால் வெளித்தோற்றத்தில் சிறிது மாற்றம் அடைந்துள்ளன.

Friday, December 24, 2021

திருக்கோயில் திருப்பணியாளர் இல்லம்.

தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலங்களுள் ஒன்றான "திருத்தென்குடித்திட்டை" திருக்கோயில் கல் திருப்பணி செய்த திருப்பணியாளர் பலவான்குடி இராம.கு.இராம.இராமசாமி செட்டியாரின் இல்லம்.







சிறந்த சைவசித்தாந்த வித்தகரான பலவான்குடி இராம.கு.இராம. இராமசாமி செட்டியார், சீர்திருத்த செம்மல் சொ.முருகப்பா உருவாக்கிய சிவநேசர் திருக்கூட்டம் என்ற அமைப்புடன் இணைந்து அதன் சார்பில் கி.பி.1927 முதல் 'சிவநேசன்' என்ற சைவசித்தாந்த வார இதழைத் தாமே ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து 1927 முதல் 1937 வரை நடத்திவந்தார். இவ்விதழ் சிவகங்கை மாவட்டம் பலவான்குடியில் இருந்து வெளிவந்தது. மற்ற சைவ சித்தாந்த இதழ்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, சமகால பிரச்சினைகளை அதிகளவில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு செயல்பட்ட ஒரே சைவ இதழாக இது திகழ்ந்துள்ளது. குறிப்பாக, ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிரான கட்டுரைகளை சிவநேசன் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது. அக்காலகட்டத்தில் புகழ் பெற்ற சைவப் பேரறிஞர்கள் சிவநேசனில் எழுதுவதைப் பெருமையாகக் கருதும் அளவுக்கு மாநிலம் தழுவிய அளவில் சிவநேசன் இதழுக்கு பெரும் வரவேற்பும் ஆசிரியர் இராம.கு.இராம.இராமசாமிச் செட்டியாருக்கு பெரும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. 

திருத்தென்குடிதிட்டை திருக்கோயிலில் உள்ள இராம.கு.இராம. இராமசாமி செட்டியார் சிலை.

மேலும் நகரத்தாரின் ஒன்பது கோயில்களுள் ஒன்றாகிய வைரவன் கோயில் புராணத்தை உரைநடை நூலாக்கிய சிறப்பும் இவரையே சாரும். இவர் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் பலவான்குடியில் இவர் வாழ்ந்த வீட்டை இவரின் வம்சாவளியினர் சீரும் சிறப்புமாக பராமரித்து பேணிக்காத்து வருகி்ன்றனர்.

-பழ.கைலாஷ்
24/12/2021


செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...