Followers

Saturday, December 7, 2019

இந்தியாவின் முதல் காந்தி சிலை-காரைக்குடி.

ஆட்கொண்டநாதர் திருக்கோவில்.
இரணியூர்.
சிவகங்கை மாவட்டம்.

இந்தியாவிலேயே முதன்முதலில் மகாத்மா காந்தி அவர்களுக்கு சிற்பம் செதுக்கப்பட்ட இடம் காரைக்குடி அருகேயுள்ள இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி திருக்கோவில்.

நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஒன்பது கோவில்களுள் ஒன்றான இரணியூர் கோவிலில் 1944ஆம் ஆண்டு பிரகார கல்தடித்தூண் திருப்பணி நடந்த போது பாரத மாதா, மகாத்மா காந்தி, இராட்டை சிற்பங்கள் கோவில் பிரகார விதானத்தில் எழுவங்கோட்டை சிற்பிகளை கொண்டு நகரத்தாரால் அமைக்கப்பெற்றது.

டெல்லியில் உள்ள ஜண்டேவாளன் மந்திர் எனும் கோவிலில் சுதந்திரப்போராட்ட காலத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் இது மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. பம்பாயில் விநாயகர் சதுர்த்தி தேசிய எழுச்சிக்குப் பயன்பட்டது. அது போல் இரணிக் கோவிலில் பாரத மாதா, மகாத்மா காந்தி சிற்பங்கள் தமிழக மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...