Followers

Saturday, October 14, 2023

தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணிக்கு முன் இராமேஸ்வரம்!

தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணிக்கு முன் இராமேஸ்வரம் கோவிலின் அரிய புகைப்படம் இது.



இன்று நாம் நின்று இராமநாதரை வணங்கும் பிரமாண்ட முன்மண்டபம் அக்காலத்தில் இல்லை! முதல் திருச்சுற்று மண்டபமும் இல்லை! விஸ்வநாதர் சந்நிதி அருகேயே மக்கள் தீர்த்தமாடுவதையும் படத்தில் காணலாம். இந்தப் புகைப்படம் 19-ஆம் நூற்றாண்டு இறுதியில் திருப்பணி வேலைகள் நடக்கும் போது எடுக்கப்பட்டது.

தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியார், நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் வந்தவர். இவர் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பர். இவர் பாஸ்கர சேதுபதிக்கு செய்த பேருதவியால், சேதுபதி இவருக்கு 26 1/2 கிராமங்களை கொடுத்து தேவகோட்டை ஜமீந்தாராக ஆக்கினார்.

19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இராமேஸ்வரம் கோயில் திருப்பணியை அழ.அரு.இராமசாமி செட்டியார் தொடங்கினார், அவருக்கு பின் அவரது மகன்களால் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றது, சுவாமி சந்நிதியின் மஹா மண்டபம், முதல் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்றின் பெரும்பகுதி ஆகியன புதிதாக கட்டப்பெற்றது. சிதிலமடைந்திருந்த பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி பிரித்து பெரிதாக கட்டப்பெற்றது. இடிந்து கிடந்த கிழக்கு கோபுரம் மீண்டும் எழுப்பப்பெற்றது, மேலும் கோயில் முழுமையும் பழுதுபார்த்து கும்பாபிஷேகம் செய்தனர். 

மேலும் தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினர் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், காளையார்கோவில், திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் ஆகிய திருத்தலங்களில் திருப்பணிகள் செய்துள்ளனர்.

-பழ.கைலாஷ்

No comments:

Post a Comment

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...