Followers

Friday, February 28, 2025

அமராவதிபுதூர் மழலையர் பள்ளி - 1939

          காரைக்குடி சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா அவர்களால் 1938ல் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் இளம் விதவைப்பெண்கள் மற்றும் கைவிடப்பட்டபெண்கள் முன்னேற்றத்துக்காக "மகளிர் இல்லம்" தொடங்கப்பெற்றது. அதில் பெண்களுக்கு கல்வியும் , கைத்தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. சிலருக்கு மறுமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளது. 


இப்பெண்களின் குழந்தைகள் கல்வி கற்க மகளிர் இல்ல வளாகத்தினுள்ளே 1939-ல் ஒரு மழலையர் பள்ளி தொடங்கப்பெற்றுள்ளது. மழலையர் பள்ளி கட்டிடத்தை இலங்கை ஸ்ரீலஸ்ரீ விபுலானந்த சுவாமிகள் திறந்துவைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


பெண்கள் மறுமணம், கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்த சொ.முருகப்பா பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. அறியப்படாத மனிதருள் ஒருவராய் உள்ளார்.


- பழ.கைலாஷ் 

No comments:

Post a Comment

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...