Followers

Tuesday, February 18, 2025

திருத்தங்கூர் நாகநாதசுவாமி கோயில்.

  

               நாகநாதசுவாமி கோயில், சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகேயுள்ள திருத்தங்கூரில் உள்ளது. இது சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குரிய கோயில்.

இக்கோயில் எப்போது யாரால் எந்த காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்று சரியாக தெரியவில்லை. பிற்கால பாண்டியர்கால கோயிலாக இருக்கலாம். தற்போது உள்ள கோயிலானது முழுவதும் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் புதிதாய் கட்டப்பட்டு கி.பி.1904ல் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுள்ளது.


சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி கோயில்களாக தனி இராஜ கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளது.


பழைய கல்வெட்டுகள் ஏதும் இல்லை. நகரத்தார் கட்டியதற்கும் கல்வெட்டு வைத்துக்கொள்ள வில்லை.


1904-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தபோது கண்டனூர் நா.பெ.நா.முத்துராமையாவால் "கும்பாபிஷேக கவி" ஒன்று பாடப்பட்டுள்ளது. அதில் நகரத்தாரால் கோயில் கட்டப்பட்டு குரோதி வருஷம்(1904) சித்திரை 10ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பெற்றதாய் உள்ளது.


கும்பாபிஷேக கவி.

"செயமிகு குரோதிசம் வற்சரஞ் சித்திரை மாதமது தேதிபத்

திற், றிகழ்சுக்ர வாரமுறு பூர்வபட் சத்திலே திதியான சத்தமித 

னி, - னயமதாம் புனர்பூச நட்சத் திரத்திடப லக்கின மாந்தினத்தி, 

னாட்டிலுள வணிகர்சேர்ந் தூனாவொ டானாவு நன்மையாம் பொருள்

கொடுத்து, - வயல்வளஞ் சூழ்திருத் தங்கூரி லுறைநாக நாதனாம் 

வள்ளலுக்கு, மாதா வெனுஞ்சொன்ன வல்லிமுத லனைவர்க்கு மாப 

ணி யியற்றி யன்பாய்ச், - சுயமான வட்டபந் தனமோடு கும்பாபி

டேகமுஞ் சுகமதாகத் தூய்தா நடந்ததும் நற்கடவுள் பவனியுஞ்

சொல்லுதற் கெளியவாமோ"


அன்பன் 

பழ.கைலாஷ்.














No comments:

Post a Comment

செட்டிநாட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! மீஸெல் அட்மென்ட் - பெர்னார்ட் டிராகன் சிறப்பு பேட்டி.

- பழ.கைலாஷ் -                       செ ட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பலர் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள்,...