Followers

Wednesday, July 23, 2025

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில் நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் 33வது ஆண்டு கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் வெளியிடப்பட்டது.



சு .இராசகோபால் அவர்கள் தமிழகத்தின் மூத்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவர். தமிழக அரசின் தொல்லியல் துறையில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டுகள் தொடர்பாக பல நூல்கள் படைத்துள்ளார்.


இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவர். தொல்லியல் தொடர்பாகவும் கல்வெட்டுகள் தொடர்பாகவும் யாரேனும் சந்தேகம் கேட்டால் அதை உடனடியாக தீர்த்து வைப்பார். பெரியவர் சிறியவர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. தன் கருத்தே இறுதியானது என்றும் எப்போதும் வற்புறுத்த மாட்டார். அவர் முயற்சியால் வழிகாட்டலால் பல இளம் ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.


பவளவிழா நாயகர் சு.இராசகோபால் ஐயா மற்றும் பவானி ஆச்சியுடன் நான்.



சு.இராசகோபால் அவர்களின் தந்தையார் ஆத்தங்குடி பெ.மு.சுப.சுப்பையா செட்டியார் தீவிர தேசபக்தர், மகாத்மா காந்தி மீது கொண்ட பற்றால் இறுதி காலம் வரை மேற்ச்சட்டை அணியாமல் வாழ்ந்து வந்தார். மூதறிஞர் இராஜாஜியுடன் கொண்ட நட்பால் தன் மகனுக்கு இராசகோபால் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

சு.இராசகோபால் பாலகனாக இருந்தபோது அவர் தந்தையின் நண்பர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் பாலகன் சு.இராசகோபால் மீது பாடிய வாழ்த்துப்பா இது...

"வேலன் முருகன் ஆறுமுகன்

வின்னோர் பெருமான் திருவருளால்

பாலன் ராஜ கோபாலன்

பாரில் என்றும் வாழ்கவே.


அன்னை மதுரை மீனாட்சி

அருளால் ராஜ கோபாலன்

மன்னும் உலகில் நீடூழி

வாழ்க வாழ்க வாழ்கவே.


அன்னை பெரிய நாயகியின்

அருளால் ராஜ கோபாலன்

மன்னும் உலகில் நீடூழி

வாழ்க வாழ்க வாழ்கவே.


அந்தி வண்ணன் பிறைசூடி

ஆடும் பெருமாள் திருவருளால்

மைந்தன் ராஜ கோபாலன்

வாழ்க வாழ்க வாழ்கவே."


பவள விழா நாயகர் ஐயா சு.இராசகோபால் அவர்கள் அடுத்தடுத்து அமுதவிழா, கனகவிழா காண வாழ்த்தி வணங்குகின்றேன்.


- பழ.கைலாஷ்

Friday, July 18, 2025

அழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் காமராஜர்

       ழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், கல்லூரி நிறுவனர் வள்ளல் அழகப்ப செட்டியார், முருகப்பா குரூப்ஸ் அ.மு.மு.முருகப்ப செட்டியார், கானாடுகாத்தான் C.V.CT.வெங்கடாசலம் செட்டியார் இருக்கும் புகைப்படம்.



கோட்டையூரில் தாம் கட்டிய வீட்டை(ஸ்ரீநிவாஸ்) 1954-ஆம் ஆண்டு மகளிர் கல்லூரியாக மாற்றினார் வள்ளல் அழகப்பர். ஆகையால் "குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்" என்று போற்றப்படுகிறார்.

-பழ.கைலாஷ் 

காரைக்குடி இராமவிலாஸ் பங்களா குருப் புகைப்படம்

        


              காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் அருகேயுள்ள "இராமவிலாஸ்" பங்களாவின் முகப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம். 1930களில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம்.

வலமிருந்து இடது அமர்ந்திருப்பவர்கள் - இராமநாதன், கம்பனடிப்பொடி சா.கணேசன், இராஜாஜி , ஆறு.சொக்கலிங்கம் செட்டியார்(இராமவிலாஸ் வீட்டு உரிமையாளர்), காமராஜர், கிருஷ்ணசாமி நாயுடு.

ஆறு.சொக்கலிங்கம் செட்டியார் காரைக்குடியின் முதல் சட்டமன்ற உறுப்பினர். 

- பழ.கைலாஷ் 


Wednesday, July 16, 2025

தேவகோட்டை வெள்ளையன் ஊரணி குறித்து ஒரு சுவாரசியமான தகவல்.






தேவகோட்டை "வெள்ளையன் ஊரணி" இன்று ஊர் நடுவே மிகப்பெரிய சாக்கடையாக உள்ளது, சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவுநீர் ஊரணியில் கலக்கின்றது.

ஒரு காலத்தில் இந்த வெள்ளையன் ஊரணி தேவகோட்டை மக்கள் தாகத்தை தீர்க்கும் குடிதண்ணீர் ஊரணியாக இருந்துள்ளது. பின்னர் குளிக்கும் குளமாக இருந்துள்ளது, அதன்பின்னர் மலம் ஜலம் கழித்துவிட்டு கைகால் கழுவும் இடமாக இருந்தது, தற்போது அதற்கும் லாயக்கற்று இருக்கிறது.

1911ஆம் ஆண்டு வெள்ளையன் ஊரணி கலங்காதகண்ட விநாயகர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த அன்றைய திருவாடானை கோர்ட் நீதிபதி அவர்கள், ஊரணியில் பல் துலக்கிய பெண்கள் இருவரை கண்டித்து அபராதம் விதித்துள்ளார். அபராதம் என்றால் பணம் எதுவும் கட்ட சொல்லவில்லை, அவர்களை பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும்படி செய்துள்ளார். இது அன்றைய வைசியமித்ரன் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது.

வைசியமித்ரன் செய்தி பின்வருமாறு,

"வெள்ளையனூருணி விபரம்,

திருவாடானை நீதிபதியவர்கள் இவ்வூருக்கு வந்த போது, வெள்ளையனூருணியில் வந்திறங்கிப் பல் விளக்கி ஆபாசஞ் செய்தவர்களிருவருக்கு அபராதம் போடும்படி உத்தரவு செய்தார்களாம், பெண்கள் சிலருக்கும் அபராதமாகக் கோயிலுக்குத் தேங்காயுடைக்க செய்தார்களாம். எல்லோருக்கும் இது எச்சரிக்கையும், படிப்பினையுமாகும். இவ்வூருணியின் தண்ணீர் பானத்திற்கே உபயோகப்படுத்துவதாலும், அதன்கரையில் வசிப்போர்கள் காலையில் காவற்காரன் வருவதற்கு முன்னமேயே, அந்நீரில் ஸ்நானம் பண்ணுவதும், புடவைகளை நனைப்பதும், முதலிய அடாத செய்கைகளை விடியுமுன்பே செய்துவிட்டுப் போய் விடுவதாகக் கேள்வியுண்டாகையாலும், இவைகளை யெல்லாம் நிறுத்துவதற்கு, அவ்வூருணிக்கு இப்போது அமைந்திருக்கும் இரும்பு வேலியோடு இரும்பு கதவுகள் போட்டுவிட்டால் வெகு நலமாகும். அன்றியும், பலகைகளில் "ஆபாசஞ் செய்வோர் அபராதத்திற்குள்ளாவர்" என்று அறிவிப்பு எழுதி தொங்கவிடப்பட வேண்டும். இப்படி செய்தால் எவ்வழியும் அவ்வூருணித் தண்ணீருக்கு கெடுதி நேராது."


ஒரு காலத்தில் பல் துலக்கியதற்கும் புடவைகளை நனைத்ததற்கும் அபராதம் விதித்த ஊரணியின் நிலைமை இன்று படுமோசமாக இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

- பழ.கைலாஷ் 

Friday, July 11, 2025

நகரத்தார் கல்வெட்டு

 ன்றைய(11/07/2025) தினத்தந்தி நாளிதழில் நகரத்தார் தொடர்பான 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வந்துள்ளது.


11/07/2025 தினத்தந்தி

இந்த கல்வெட்டு கண்டறியப்பட்ட "துவார்" என்னும் ஊரில் ஒரு காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வசித்துவந்தனர் என்று பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர் இங்கு வாழ்ந்த நகரத்தார்கள் வேறு சில ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர். இவ்வூர் நகரத்தார் வாழ்ந்த பழைய ஊர்கள் பட்டியலில் உள்ளது. இன்றும் இவ்வூரில் உள்ள வள்ளிலிங்கம் ஐயனாரை நகரத்தார் பலர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்குள் அடைக்கம்மை ஆச்சி என்பவர் அடைக்கலம் ஆகியுள்ளார் அவருக்கு தனி சன்னதி உள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு மூலமாக தெரிய வருவது என்னவென்றால் 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் இங்கு வாழ்ந்து வந்த நகரத்தார் ஒருவர் வள்ளிக்கண்மாய் அருகே ஒரு ஊருணியை ஏற்படுத்தி உள்ளார். அதில் கல்வெட்டில், அவர் பெயரை பதிவு செய்துள்ளார். கல்வெட்டின் படி அவர் இளையாத்தங்குடி கோவில் கழனிவாசல் பிரிவை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் சிவந்தகாலழகியார் என்றும் தெரியவருகிறது.

- பழ.கைலாஷ்

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...