இன்றைய(11/07/2025) தினத்தந்தி நாளிதழில் நகரத்தார் தொடர்பான 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வந்துள்ளது.
![]() |
11/07/2025 தினத்தந்தி |
இந்த கல்வெட்டு கண்டறியப்பட்ட "துவார்" என்னும் ஊரில் ஒரு காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வசித்துவந்தனர் என்று பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர் இங்கு வாழ்ந்த நகரத்தார்கள் வேறு சில ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர். இவ்வூர் நகரத்தார் வாழ்ந்த பழைய ஊர்கள் பட்டியலில் உள்ளது. இன்றும் இவ்வூரில் உள்ள வள்ளிலிங்கம் ஐயனாரை நகரத்தார் பலர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்குள் அடைக்கம்மை ஆச்சி என்பவர் அடைக்கலம் ஆகியுள்ளார் அவருக்கு தனி சன்னதி உள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு மூலமாக தெரிய வருவது என்னவென்றால் 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் இங்கு வாழ்ந்து வந்த நகரத்தார் ஒருவர் வள்ளிக்கண்மாய் அருகே ஒரு ஊருணியை ஏற்படுத்தி உள்ளார். அதில் கல்வெட்டில், அவர் பெயரை பதிவு செய்துள்ளார். கல்வெட்டின் படி அவர் இளையாத்தங்குடி கோவில் கழனிவாசல் பிரிவை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் சிவந்தகாலழகியார் என்றும் தெரியவருகிறது.
- பழ.கைலாஷ்
No comments:
Post a Comment