ஒரு பழைய புகைப்படம்.
மெட்ராஸ் கவர்னர் லார்ட் ஜார்ஜ் கோஷெனுடன் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் அவரது மூன்று மகன்கள் உள்ளனர்.
மூன்று மகன்கள்:-
1. ராஜா சர் முத்தையா செட்டியார்
2. மேயர் இராமநாதன் செட்டியார்
3. M.A.சிதம்பரம் செட்டியார்
இவர்கள் மூவருமே மெட்ராஸ் மேயராக இருந்தவர்கள். மெட்ராஸின் முதல் மேயர் முத்தையா செட்டியார். உலகிலேயே உடன்பிறந்த சகோதரர்கள் அனைவருமே(மூவர்) ஒரு நகரத்தின் மேயராக இருந்தவர்கள் இவர்கள் மட்டுமே!.
ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் சகோதரரும் இந்தியன் வங்கி நிறுவனருமான திவான் பகதூர் இராமசாமி செட்டியாருக்கு ஆன் வாரிசு இல்லாததால், அண்ணாமலை செட்டியார் தனது இரண்டாவது மகன் இராமநாதனை தனது சகோதரருக்கு சுவீகாரம் கொடுத்துவிட்டார்(தத்துக் கொடுத்துவிட்டார்).
M.A.சிதம்பரம் செட்டியார் பிசிசிஐ (BCCI)யின் தலைவராக இருந்தவர். இவரது முயற்சியால் உருவான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
- பழ.கைலாஷ்.
Photo Courtesy : Valliappan Ramanathan, Devakottai.
No comments:
Post a Comment