Followers

Tuesday, November 5, 2019

காந்தி நாவன்னா


"தேவகோட்டை காந்தி நாவன்னா" என்று அழைக்கப்பட்ட SV.L.RM.நாராயணன் செட்டியார் ஒரு பழுத்த காந்தியவாதி.

மூன்றாவது முறையாக மகாத்மா காந்தி அவர்கள் 1934ல் தேவகோட்டை வந்தபோது தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் சுதந்திர போராட்ட நிதிக்காக காந்திஜியிடம்  நாவன்னா ரொக்கமாக 2600 உரூபாய் வழங்கினார். தேவகோட்டை கார்ப்பரேஷன் ரோட்டில்(EB ROAD) உள்ள தன் தோட்டத்திற்கு காந்திஜியை அழைத்து சென்றார்.
அங்கே நாவன்னாவின் மகளுக்கு சாவித்திரி என்று பெயர் சூட்டி புகைப்படத்தின் பின் சாவித்திரி என்று தன் கையால் தமிழில் எழுதி கொடுத்தார் காந்தி. பெயர் சூட்டியதற்காக நாவன்னாவின் மனைவி சிவகாமி ஆச்சி வெள்ளி தட்டையும் ஒரு பவுனையும் அளித்து மரியாதை தெரிவித்தார். 

காந்தி நாவன்னா வீடு
தேவகோட்டை 
           


மகாத்மாகாந்தி அவர்கள் 1937ல் மத்திய பிரதேசத்திலிருந்து தேவகோட்டையிலுள்ள காந்தி நாவன்னாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் தமிழில் காந்தி என கையொப்பமிட்டுள்ளார். (தற்போது இந்த கடிதம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளது)

காந்தி நாவன்னா தன் விரல்களாலே எலுமிச்சை பலத்தை வெட்டி எல்லோரையும் ஆச்சரிய பட வைப்பாராம்.
சட்டை அணியாமல் வெண்தாடியுடன் இருப்பவர் காந்தி நாவன்னா.

ஆட்டு பால் மற்றும் கடலை மட்டுமே சாப்பிட்டு சட்டை அணியாமல் சாகும்வரை காந்தியவாதியாக வாழ்ந்தவர் நாவன்னா என்பது குறிப்பிடத்தக்கது. 1978 பிப்ரவரி 27ல் மறைந்தார்.


Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...