Followers

Saturday, November 9, 2019

பெருமை மிகு காரைக்குடி



ன்றிலிருந்து சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வருகை புரிந்திருந்தார்.

இன்று(09.11.2019) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வந்ததின் நூற்றாண்டு நிறைவு நாள்.

 பாரதியார் தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்கு கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு புகைப்படங்கள் காரைக்குடியில் எடுக்கப்பட்டது.



அதில் ஒன்று காரைக்குடி இந்துமதாபிமான சங்க குழுவினர்கள் அ.மு.க.மு.க.ரெங்கநாதன் செட்டியார், இராய.சொக்கலிங்கம், சொ.முருகப்பர், கி.நாராயணன் செட்டியார், மு.நடராஜன் உடன்
சுப்பிரமணிய பாரதியார் இருக்கும் புகைப்படம். பின்னாளில் ஒரு பத்திரிகை பேட்டியில் இராய.சொ கூறுகையில் "பாரதியைப் படம் பிடிக்க விரும்பினோம். எதற்கும் அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே மனம் வந்ததால்தான் படம் பிடிக்க ஒப்புக் கொண்டார். வேண்டிய எல்லாம் தயார் செய்யப்பெற்றன. பாரதியாரை உட்காரவைத்தோம். ஒரு தடிக் கம்பைத் தூக்கிக் கையிலே தலைக்குமேலே கம்பு தோன்றும்படி நிறுத்திக்கொண்டார். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம்பிடிப்பவருக்குச் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ சொல்லியும் பாரதி கேட்கவில்லை பிறகு அப்படியே எடுக்கச் செய்தோம்''.



மற்றொன்று பாரதியாரின் மிக புகழ் பெற்ற புகைப்படமான கருப்பு கோட் அணிந்து தலைப்பாகையுடன் கையில் கோல் கொண்டு நாற்காலியில் வீற்றிருக்கும் அவரின் அழகிய புகைப்படம். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து பலநூறு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது பல சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

-Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...