Followers

Wednesday, March 4, 2020

கல்லங்குடி கம்பர் கோயில்



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 11கி.மீ தொலைவில் உள்ள கல்லங்குடி கிராமம் அருகே அடர்ந்த காட்டின் நடுவில் பழமையான சிவன் கோயில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
கோவில் முகப்பு தோற்றம் 










கம்பர் சிலை 
கவிச்சக்கரவர்த்தி கம்பர் முழு உருவ சிலை
ஒன்று இருக்கிறது. கம்பர் சிலகாலம் இங்கு வாழ்ந்ததாகவும் இங்கிருந்து ஏழு மைல் தொலைவிலுள்ள நாட்டரசன்கோட்டையில் சமாதி அடைந்ததாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.


கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்


இக்கோயிலில் எட்டுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பழமையானது, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216-1238) கல்வெட்டாகும். இக்கல்வெட்டு, இம்மன்னனின் நான்காம் ஆட்சியில் (கி.பி.1220) இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டுகளின் மூலம் இக்கோயில் பிற்காலப் பாண்டிய மன்னர் மரபினர்களால் கி.பி.13-ஆம் நூற்றாண்டில்(சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டப்பட்டது எனத் தெரியவருகிறது.
மேற்படி கல்வெட்டு விபரங்கள் தினமணி நாளிதழில் வந்தது.

நந்தி சிலை 



சிதிலமடைந்த
கொடுங்கை 









இங்குள்ள கல்வெட்டுகளையும், கம்பரின் முழு உருவச்சிலையையும் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து இது கம்பரின் சிலைதானா என்பதைத் உறுதிசெய்ய வேண்டும் என்பதும், இக்கோயிலை தமிழக அரசு புதுப்பித்துத்தர வேண்டும் என்பதும் இங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.


Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...