Followers

Saturday, March 21, 2020

உஞ்சனை மகா கணபதி கோயில்

உஞ்சனை சிவன் கோயில்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள 'உஞ்சனை'யில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் முன்புறம் சாத்தன் செட்டியார் மகன் சுப்பிரமணியன் செட்டியாரால் சுமார் 700 ஆண்டுகட்கு முன்பு செம்பூரான் கற்களினால் கட்டப்பட்ட பிள்ளையார் கோயில் ஒன்றுள்ளது.
மகா கணபதி கோயில்



ஸ்ரீ மகா கணபதி 
                 
சுப்பிரமணியன் செட்டியார் 

செட்டியார் சிலை 2


செட்டியார் சிலை 3

செட்டியார் சிலை 4


13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு 

"கல்வாச நாட்டில் 
எலையாத்தங்குடியான 
குல சேகர புரத்தில் 
பெருமரவூர் உடையார் சாத்தன்
செட்டியார் சுப்பிரமணியன்"  என்ற  கல்வெட்டு வாசகம் ஒரு செட்டியார் சிலையின் மேற்புறத்தூணில் வடிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் உஞ்சனையில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்/நகரத்தார்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

 உஞ்சனையை விட்டு அருகிலிருந்த ஊர்களுக்கு வசிக்கச் சென்ற பின்
13ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற  இக்கோவில் பராமரிப்பின்றிச் சிதிலமடைந்தது.

இந்நிலையில் உஞ்சனை நாட்டுப் பெரிய அம்பலகாரர் இராம.இராமசாமி அய்யா அவர்கள், நாட்டார்கள் மற்றும் கிராமத்தார்கள்
அனைவரும்
முனைவர் தேவகோட்டை இராமநாதன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்படி தேவகோட்டை  இராமநாதன் அவர்களின்  பெருமுயற்சியால், நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சார்பில் திருஅண்ணாமலை நகரத்தார் உபயதாரர்கள்குழுவின் தலைவர் கோட்டையூர் க.வீ.மு.சொ.நா.சொ.அழகப்பன் செட்டியார் அவர்களால்
மிகவும் பழமை வாய்ந்த, தினமும் காலையில் சூரியன் கதிரொளியால் பூசிக்கும்,அதிசயமான உஞ்சனை "மகா கணபதி கோயில்" மிகச்சிறப்பான முறையில் பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டு, இன்று(12.03.2020) குடமுழுக்கு நடத்தப்பெற்றது.

புதிய கல்வெட்டு 
க.வீ.மு.சொ.நா.சொ.அழகப்பன் செட்டியார்  குடும்பத்தினர், தேவகோட்டை இராமநாதன் மற்றும் நான்.

Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...