Followers

Saturday, March 21, 2020

சித்தாட்டிவயல் பிள்ளையார் கோயில்

சிவகங்கை மாவட்டம் 'உஞ்சனை'யை அடுத்துள்ள ஊர் 'சித்தாட்டிவயல்'.

இந்த சித்தாட்டிவயல் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் ஒரு பழமையான பிள்ளையார் கோவில் உள்ளது.
















ஒரு காலத்தில் இந்த ஊரில் நாட்டுக்கோட்டை செட்டியார்/நகரத்தார் சமூகத்தினர் சிலர் வாழ்ந்து வந்துள்ளனர்.

நகரத்தார்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் கட்டிய பிள்ளையார் கோவில் இன்று பராமரிப்பின்றி உள்ளது.

கருங்கல்,செம்பராங்கல் மற்றும் சுட்ட செங்கலால் கோவிலை கட்டியுள்ளனர்.
பிள்ளையார் சிலை மற்றும் மூஞ்சுறு சிலை தவிர்த்து மற்ற சிலைகள் திருடு போய்விட்டது.  கல்தூணின் இரண்டு செட்டியார்கள் சிலைகள் உள்ளன. சமீபத்தில் தான் பைரவர் சிலை திருடுபோனதாக கூறுகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பிள்ளையார் சிலையை திருடிய ஒருவன், ஊர் எல்லையை கடக்கும் போது கண் குருடாகி கண்மாயில் விழுந்து இறந்து போனானாம்! பின்னர் ஊர் மக்கள் சிலையை மீட்டு கொண்டுவந்து வைத்துள்ளனர்.

செட்டியார்கள் யாராவது வந்து கோவிலை புணரமைத்து தரவேண்டும் என்பது இவ்வூர் மக்கள் விருப்பம்.

Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...