பர்வதவர்த்தினி உடனமர் இராமநாத சுவாமி திருக்கோவில்,
களத்தூர்(புதுவயல் அருகே),
சிவகங்கை மாவட்டம்.
இக்கோயில் கி.பி 1908ஆம் ஆண்டு கோட்டையூர் க.வீ.சொ.வீ.அழகப்ப செட்டியார் அவர்களால் கட்டப்பெற்றது.(இவர் கல்லூரி கட்டிய வள்ளல் அழகப்ப செட்டியார் இல்லை)
க.வீ.சொ.வீ.அழகப்ப செட்டியார் கோவிலூர் மடாலயத்தின் ஐந்தாவது மடாதிபதி திருக்களர் ஆண்டவரின் சீடர், சிறந்த வேதாந்த வித்தகர். பற்பல கோயில் திருப்பணிகள் செய்துள்ளார். கோட்டையூரில் தாம் வாழ்ந்த பெரிய வீட்டையே பள்ளிக்கூடத்திற்கு கொடுத்துவிட்டார்.
இவர் களத்தூரில் கட்டிய கோயில் தற்போது மிகுந்த சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பார்க்க வருத்தமாக உள்ளது. நீண்டகாலமாகவே இவரின் குடும்பத்தாருக்கும் கோயிலுக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளது.
நான் மேற்படி குடும்பத்தாருக்கு இக்கோயில் பற்றிய தகவலை கூறியுள்ளேன். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்பலாம்.
-பழ.கைலாஷ்
13/01/2025
No comments:
Post a Comment